BREAKING NEWS

Diabetes

உடல் நோய் தீர்க்கும் மூலிகை மருந்துகள்  

சர்க்கரை நோய்

தோல் பிரச்னைகள்

Category 4

Category 5

Thursday 26 June 2014

வாய் துர்நாற்றாமா? வாங்க சரி செய்யலாம்?


சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.

சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன.
remedy for mouth odor

இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.
வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.

கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது.

வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது.

வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.

பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது.

இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.

அடுத்து,  வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontists) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது.

இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.

வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?


1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை.

வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது.

இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்.

4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும்.

வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.

5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும்.  Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது.

Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.

சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும்.

பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.

Tuesday 24 June 2014

சுண்டைக்காய் சாப்பிடுங்க.. சர்க்கரை நோயை போக்குங்க!

சுண்டைக்காய் சாப்பிட்டா சர்க்கரை நோயை போய்விடும். கிராமத்தில் அசால்டா சுண்டைக்காய் பய' என்று கூறுவார்கள். அளவில் சிறியதாக இருந்தாலும், அது செய்யும் வேலைகளோ மிக பெரியது.

அற்புதமான மருத்துவ குணம் இந்த இந்த சுண்டைக்காயில் இரண்டு வகை உண்டு. கசப்பு சுண்டை, கறி சுண்டை என இரு வகையில் இருந்தாலும், இரண்டுமே மருத்துவ குணங்கள் கொண்டவைதான்.

இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து. ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது.
best-remedy-for-diabetes-turke


அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.

கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும்.

மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.

மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது. முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.

இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும். சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பல்வேறு முறைகளை பயன்படுத்துகின்றனர். டி.வி. களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஆயுர்வேத மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவோரும் உண்டு.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை உண்டு கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.

உணவு கட்டுப்பாடு மட்டும் இல்லையென்றால், எந்த மருந்து உட்கொண்டாலும், மீண்டும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுதான் நடைமுறை உண்மை.
15-best-foods-to-control-diabetes

உணவு கட்டுப்பாடு செய்வது பலருக்கும் பிடிக்காத விஷயமாகும். விருப்பமானதை உண்ண முடியாது வேதனை படுவார்கள். ஆனால் உண்ணும் உணவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதாக அமைந்தால் நன்றாக இருக்குமல்லவா?

இதோ அதுபோன்ற உணவுமுறைகள் கீழே: 

சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி (Hereditary disease) என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் (Carbohydrates, fat and protein) 60:20:20 விகிதம் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகள்

1. வெந்தயம் (Dill): ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2. தக்காளி (Tomato): நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3. பாதாம் (Almond): தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4. தானிய வகைகள் (Cereals): தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் (Pasta or noodles) சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5. பால் (Milk): பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6. காய்கறிகள் (Vegetables): அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7. பருப்பு வகைகள் (Pulses): பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் (Carbohydrate) கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் (Blood glucose) தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8. ஒமேகா3 (Omega 3): ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9. பழங்கள் (Fruits): அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10. உணவு முறை  (Diet): அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா (Fruits, fiber biscuits, buttermilk, curd, vegetable) போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11. முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் (Minerals) கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12. இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13. தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14. அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம்.

சர்க்கரை நோயை ஏற்படுத்தும் உணவு வகைளை அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.

நாள் முழுவதும் களைப்பா இருக்கா? முதல்ல இத படிங்க..!

இரவு முழுவதும் தூங்கி எழுந்த பிறகும், உடல் அதிக சோர்வாக இருப்பதா உணர்கிறீர்களா? அப்படியானால் நிச்சயம் உங்கள் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

அதிக வேலை செய்யாமல், திடீரென நீங்கள் இதுபோல களைப்படைந்த்தாக உணர்ந்தால் கண்டிப்பாக உங்களது உடல் நலனில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

காரணமே இல்லாமல் உடல் களைப்படைந்தால் நிச்சயமாக உடலில் ஏதோ பிரச்னை என்றுதான் அர்த்தம்.

ஒரு சில பழக்க வழக்கங்களாலும் கூட அதுபோல ஏற்படலாம். அதென்ன பழக்க வழக்கம் என்கறீர்களா?
10-weird-reasons-youre-tired-all-time

1. காலை உணவை தவிர்ப்பது;

ஒரு சிலர்  காலை உணவை தவிர்த்துவிடுவார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவ்வாறு காலை வேளை உணவை தவிர்க்கும்பொழுது, உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்காமல் போகும்.

தொடர்ந்து இரவு முழுவதும் தூங்கி எழுந்திருக்கும்பொழுது, உடலானது உணவுகளை செரித்து முடித்து, அடுத்த வேளை உணவுக்காக காத்திருக்கும். உடல் சீராக செயல்பட வேண்டுமானால் நிச்சயம் காலை வேளை உணவை உட்கொண்டே ஆக வேண்டும்.

இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

2. நல்லா தண்ணி அடிங்க

தலைப்பை பார்த்து மது என்று நினைத்துவிட வேண்டாம். உடலுக்குத் தேவையான சக்தியை கொடுப்பதில் தண்ணீருக்கும் அதிகம் பங்கு உண்டு. குறைந்த அளவு தண்ணீர் பருகுபவர்களுக்கு மெட்டாபாலிசம் குறைந்து உடல் உடலுறுப்புகள் வறட்சி அடைந்து, உடல் உறுப்புகள் சரியாக செயல்படாமல் போகும்.

உடலுறுப்புகள் செயல்படாமல் போனால் உடல் தானாகவே சோர்வு நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

3. Junk food தவிர்க்கவும்

ஜங்க் புட் எனப்படும் உடனடி உணவுகளில் அதிக கலோரிகள் இருப்பதால், அதை உண்டவுடன் தானாகவே உடல் மந்த நிலை அடைந்துவிடும். இந்த பழக்கம் தொடர, தொடர  உடல் பருமனாகும். ஆனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடும். இதனால் உடல் பருத்து காணப்பட்டாலும், உண்மையில் சக்தியில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்.

4. உடற்பயிற்சி கட்டாயம் தேவை

இப்பொழுது உடற்பயிற்சி செய்வது குறைந்து வருகிறது. குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவகத்திற்கு சென்று சேர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், உடற் பயற்சி செய்வதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை.

என்னதான் பிசி செட்யூல் இருந்தாலும், உடற்பயிற்சிக்கு என்று ஒரு அரை மணி நேரம் கட்டாயம் ஒதுக்கியே ஆகவேண்டும். இல்லையென்றால் 40 வயதிற்கு பிறகு வர வேண்டிய பிளட்பிரசர், சர்க்கரை நோய் போன்ற பணக்கார நோய்கள் 25 வயதிலிருந்தே ஆரம்பித்துவிடும்.

எல்லா வயதினரும் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்களில் மிக முக்கியமானது உடற்பயற்சி.

5. தூக்கத்தை கண்ட்ரோலில் வையுங்கள்: 

சிலர் அளவுக்கு அதிகமாக தூங்குவார்கள். சராசரி மனிதருக்கு எட்டு மணி நேரம் தூக்கம் போதுமானது. அலுவலக விடுமுறை நாட்களில் சிலர் 10 முதல் 12 மணி நேரம் கூட தூங்குவார்கள். அவ்வாறு அளவுக்கதிகமாக தூங்கும்போது, உட்கொண்ட உணவுகள் ஆற்றலாக மாறாமல், கொழுப்புகளாக உடலில் சேமித்து வைக்கப்பட்டுவிடும். கொலஸ்ட்ரால் அதிகமானால் சொல்லவா வேண்டும். எனவே எந்த நாளாக இருந்தாலும், அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல விடிய விடிய தூங்காமல் டி.வி பார்ப்பது, பார்ட்டிகளில் கலந்துகொள்வது, இப்படி செய்துவிட்டு, லேட் நைட்டில்தூங்க போவதும் உடலுக்கு அதிக கெடுதல் விளைவிக்கும். இதனால் ஜீரண கோளாறுகளிலிருந்து, மன உளைச்சல், உடல் சோர்வு என உடற்குறைகள் ஒரு பட்டியலே நீளும்.

தேவையான அளவான தூக்கம் மட்டும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

7. டென்சன் வேண்டாமே!

ஒரு சிலருக்கு அதிக டென்சன் ஏற்படும். மன இறுக்கத்தால், அதிகம் பேசாமல் இருப்பார்கள். இதனால் மூளை செயல்படாமல் அமைதியாக இருக்கும். மூளை செயல்படாமல் இருந்தாலே உடன் சோர்வடைந்துவிடும். மன இறுக்கத்தை போக்க, நண்பர்களுடன் உரையாடலாம். பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபடலாம். வெளியில் சென்று காலாற நடந்துவரலாம். அந்த மனநிலையிலிருந்து மாற்றி, உங்களை உற்சாகமடையச் செய்யும் இடங்களுக்குச் சென்று வரலாம்.

8. வைட்டமின் பி குறைந்தாலும் உடற்சோர்வு

உடலில் வைட்டமின் பி குறைந்தாலும் உடற்சோர்வு ஏற்படும். சைவ உணவு பிரியர்களுக்கு இக்குறைபாடு ஏற்படும் இயல்பு. ஏனென்றால் அசைவத்தில் வைட்டமின் பி அதிகம் இருக்கும். சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் பி கிடைப்பது குறைவு.  வைட்டபின் பி இருக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதனால் ஏற்படும் உடற்சோர்வை தவிர்க்கலாம்.

9. ரொம்ப நாளா உடல் சோர்வு இருக்கா?

நீண்ட காலமாக தொடர்ச்சியாக  உடல் சோர்வு இருக்கிறதென்றால் இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். ஏனென்றால் இதய நோயால், இதயம் சரிவர இயங்காமல், உடலுறுப்புகளுக்குத் தேவையான இரத்த ஓட்டம் சரி வர நடைபெறாமல் போகும். இதனால் உடல் சோர்வாக இருக்கும். இதுபோன்ற அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்வது நல்லது.

10. சர்க்கரை நோய் இருந்தாலும்

diabetes என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் (நீரிழிவு) இருந்தாலும் உடல் களைத்துப் போய்விடும். உங்களது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை நீங்கள் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

இப்படி உடல்சோர்வுக்கு பல காரணங்கள் உண்டு. தொடர்ந்து நாட்பட்ட உடல் சோர்வாக இருப்பின் நல்ல மருத்துவரை பார்த்து, உடல் சோர்வுக்கான காரணம் என்ன என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.

தேவையானளவு தூங்காமல் இருப்பதால் வரும் சோர்வு, சளி, காய்ச்சல் மற்றும் இன்ன பிற தொற்று வியாதிகளால் ஏற்படும் சோர்வு இவைகளெல்லாம் தற்காலிகமானவை. அனைவருக்கும் இயல்பாக ஏற்படும்.

தோல் சுருக்கம் ஏற்பட என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

பெண்களுக்குக் கவலையளிக்கும் ஒரு விஷயம் இந்த சரும சுருக்கம் (wrinkle). சரும சுருக்கங்களைப் போக்க சந்தையில் ஏகப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் இருக்கின்றன. இவைகள் தோல் சுருக்கத்தை போக்குகிறதோ இல்லையே.. பெண்களின் மனதை சுருங்காமல் வைத்துக்கொள்கின்றன.

இந்த க்ரீமை பயன்படுத்தினால் சரும சுருக்கங்கள் ஒரு வாரத்தில் போய்விடும், ஒரு மணி நேரத்தில் போய்விடும் என்று அந்த கம்பெனிகள் அடிக்கும் விளம்பரக் கூத்துக்களும் ஏராளம். விளம்பரங்களை உண்மை என்று நம்பி, இதில் பணத்தைத் தொலைப்பவர்கள் நிறைய பேர்.
Factors-that-can-cause-skin-wrinkles

அப்படியென்றால் சரும சுருக்கத்தைத் தடுக்கவே முடியாதா என்றால்? நிச்சயம் முடியும்!. சரும சுருக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு , அதை தவிர்ப்பதற்கான வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதோ, தோல் சுருக்கங்களைத் தடுப்பதற்கான சில எளிய வழிகள் (Some simple ways to prevent skin wrinkles).

அழகை மேம்படுத்த உதவுவதாகக் கருதப்படும் அழகு சாதனப் பொருட்களே (Beauty Aids) சருமத்தில் சுருக்கங்களையும் ஏற்படுத்தும் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆம். அது தான் உண்மை! சந்தையில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களில் செயற்கை வேதியியல் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

நிலத்தின் தன்மையை பாதிக்கும் செயற்கை உரங்களைப் போல, அழகு சாதனப் பொருட்கள் சருமத்தை பொலிவிழக்கச் செய்து, நாளடைவில் சுருக்கங்களை உண்டாக்கிவிடும். எனவே முடிந்த அளவு இந்த மேக்-கப் பொருட்களை (Makeup products) தவிர்ப்பது நல்லது. அவசியமெனில் நமது பாரம்பரியமான கடலை மாவு, எலுமிச்சை போன்ற இயற்கைப் பொருட்களைக் பயன்படுத்தலாம்.

சூரிய ஒளி சருமத்தை பாதித்து சுருக்கங்களை ஏற்படுத்த வல்லது. அதிகமாக வெயிலில் அலைந்தால், கண்களைச் சுற்றி கருவளையங்களையும், உதடுகளில் சுருக்கங்களையும் உண்டாக்கும். எனவே வெயிலில் வெளியே போக நேர்ந்தால், சருமத்திற்கு தகுந்த சன் ஸ்க்ரீன் க்ரீம்மை (Sun Screen Cream) போட்டுக் கொண்டு செல்வது நலம்.

நம் உடம்பில் தேவையான அளவை விட நீர்ச்சத்து (Water nutrient) குறையும் போது, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும் என்பது தெரியுமா?! இறந்த செல்களை வெளியேற்றுவதும், புதிய செல்களை பிறப்பித்துக் கொண்டே இருப்பதும், சருமத்தின் இயல்பு. இதற்கு நீர்ச்சத்து மிக அவசியம். உடம்பில் நீர்ச்சத்து குறையும் போது, சருமம் வறண்டு சுருக்கங்கள் உண்டாகும் (Formation of Wrinkles). இதைத் தடுக்க அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது அவசியம்.

புகைப்பிடிப்பவர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். உடம்பில் இரத்த ஓட்டத்தை குறைத்து, கருவளையங்களையும், சருமத்தில் வறட்சியையும் ஏற்படுத்தும். கேட்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும், இதைத் தடுப்பதற்கான ஒரே வழி புகைப்பிடித்தலை நிறுத்துவது மட்டுமே.

பளபளப்பான சுருக்கமில்லாத சருமத்திற்கு சரியான உணவுப் பழக்கம் மிக முக்கியம். வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளை (Vitamins and minerals, rich in green vegetables, fruits, herbs) நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

ஆரோக்கியமான உணவு சருமத்தை இளமையாகவும், சுருக்கமற்றதாகவும் வைத்திருக்கும்.

முதுமை அடையும் பொழுது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் குறையும் (Loss of moisture in the skin). இதனால் சருமம் வறண்டு சுருக்கங்கள் தோன்றும். எனினும் வயதாவதை தடுக்க முடியாது என்பதால், முடிந்த அளவு சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க முயற்சி செய்யலாம். இதற்கு சந்தைகளில் கிடைக்கும் தரமான மாய்ஸ்சுரைசரையை (Quality moisturizer cream) வாங்கி பயன்படுத்துவது பலன் தரும்.

சிலர் முகத்தை சாதாரணமாக வைத்திருக்காமல், ஏதேனும் சேஷ்டை செய்து கொண்டே இருப்பார்கள். அதிகமாக முகத்தின் தசைகளுக்கு வேலை கொடுத்தால் சுருக்கங்கள் அதிகமாக தோன்றும். அதிகம் சிரிப்பவர்களுக்கு கண்களின் இருபுறம் சுருக்கங்கள் தோன்றுவதை (Wrinkles appear on both sides of the eyes) கவனித்து இருக்கலாம். சரியான யோகா பயிற்சி மூலம் இந்தப் பிரச்சனையைத் தடுக்க முடியும்.

காபி, டீ  இவை இல்லாமல் ஊரில் பல பேரால் உயிர் வாழவே முடியாது. ஆனால் இவைகளில் இருக்கும் காஃப்பைன் (caffeine) சருமத்தில் சுருக்கங்களை உண்டாக்கும். எனவே முடிந்த அளவு காபி, டீ குடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது சருமத்திற்கு நல்லது.

சர்க்கரை நோயை ஏற்படுத்தும் உணவு முறைகள்

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் தற்பொழுது அனைத்து வயதினரையும் பாதித்து வருகிறது. குறிப்பாக நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு விரைவாகவும், குறைந்த வயதிலும் இந்த நோய் உருவாகிவிடுகிறது.

காரணம் பாஸ்புட் எனப்படும் அதிவேகமாக தயாரிப்படும் உணவுகள்தான். பாதி சமைக்கப்பட்ட உணவு பொருள்கள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் (Half-cooked food and fast food dishes)மல்டிநேசனல் கம்பெனிகளால் ஊக்குவிக்கப்பட்டு அனைத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி, அவர்களுக்கு நீரிழிவு நோய் போன்ற வியாதிகளை ஏற்படுத்துகிறது. இதில் தற்பொழுது குறைந்த வயதுள்ளவர்கள் உடல் எடை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
types-of-foods-that-would-increase-the-risk-of-you-becoming-diabetic


அதிகமான உடல் எடை நீரிழிவு நோய் மற்றும் இருதய சம்மந்தமான நோய்களையும் (Cardiovascular-related diseases) ஏற்படுத்தி விடுகிறது. எனவே நீரிழிவு நோயை தவிர்க்க சரியான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

நம் உணவுகளை சரி செய்து விட்டால் சர்க்கரை நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். க்ளைசீமிக் இன்டெக்ஸ் உணவுகளை (வேகமாக குளுக்கோஸாக மாறக் கூடிய உணவுகள்) அதிகமாக உட்கொண்டால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.

 பாஸ்தா, வெள்ளை ரொட்டி, குளிர்பானங்கள், சுத்தம் செய்யப்பட்ட மாவுப்பொருட்கள் இதனை உட்கொள்வதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. பால் மற்றும் அசைவ பொருட்களில் பூரிதக் கொழுப்பு - Saturated fat அடங்கியுள்ளது. இதனை ட்ரான்ஸ் கொழுப்பு என்றும் அழைக்கலாம். இவைகள் அடைத்து வைத்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றில் அதிகமாக இருக்கும்.

சிகப்பிறைச்சி (Red meat), பால் பொருட்கள் மற்றும் ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய் அடங்கிய பொருட்கள் எல்லாம் உடலுக்கு தீங்கானவை. நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சரியான அளவில் இல்லாத போது தான் சர்க்கரை நோய் உண்டாகிறது.

இன்றைய சூழலில் அமைந்திருக்கும் நமது சுறுசுறுப்பான வாழ்க்கை முறையும் மன அழுத்தமும் நம்மை ஒழுங்காக சாப்பிட வைப்பதில்லை. அதனால் சர்க்கரை நோய் (Diabetes) வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. காலை உணவை தவிர்த்தல் போன்றவைகளால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சமமின்மையோடு விளங்கும்.

காலை உணவை நிறைய மக்கள் தவிர்க்கின்றனர். இதனால் சர்க்கரையின் அளவு குறைந்து அதிகமான பசியை ஏற்படுத்துகிறது

க்ளைசீமிக் இன்டெக்ஸ் உணவுகளை (glycemic index food) அதிகமாக உண்ணுதல் இவ்வகை உணவுகளில் நார்ச்சத்து இருப்பதில்லை. மேலும் வேகமாக செரிமானமாகி சீக்கிரமே பசியை தூண்டும். அதே போல் அளவுக்கு அதிகமான குளுக்கோசும் வேகமாக வெளியேறிவிடும். அதனால் சர்க்கரை நோய் வருவதற்கான இடர்பாடுகள் அதிகமாக உள்ளது.

அனைத்து வகையான கொழுப்புகளும் தவறானது அல்ல, சில நல்ல கொழுப்புகளும் உள்ளது. மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யில் இது உள்ளது. இருப்பினும் எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் (The food in oil,), பாதி சமைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் (semi-cooked food), பாஸ்ட் புட் உணவுப்பொருட்கள் (fast food items) போன்றவற்றில் தேவையில்லாத கொழுப்புகள் அதிகமாக உள்ளது. இது உடல் நலத்தை கெடுக்கிறது.

நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் கூட நொறுக்குத் தீனிகளின் மீதான விருப்பம் குறைவதில்லை. அப்படி உண்ண நினைக்கும் நேரத்தில் பழங்கள் அல்லாத செயற்கையான இனிப்பு உணவுகள், சமோசா (Artificially sweetened foods, samosas) போன்ற எண்ணெய் பலகாரங்கள் நீரிழிவு நோய்களுக்கு வழி ஏற்படுத்துகிறது.

காற்று கலந்த குளிர்பானங்களும் Air mixed drinks சர்க்கரை நோயை ஏற்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கின்றன. இதில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கின்றது.

ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச் சத்துக்கள் பழங்களில் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சர்க்கரையை சரியான அளவில் வைத்து செரிமானத்தையும் சீர்பட நடத்தும். இதை தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதால் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.

பரபரவென இருக்கும் இன்றைய  நவீன உலகத்தில் மன ரீதியான அழுத்தத்திற்கு பலரும் உள்ளாகின்றனர். அதனால் நம்மை அதிகமாக உண்ணத் தூண்டும். இதனால் உடல் எடை அதிகரித்து உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
Measuring the glucose level in blood

உணவருந்திய பின் இனிப்பு பண்டங்களையும் ஐஸ் கிரீம்களையும் (Sweets, Ice Cream) வழங்குவது பெரிய பாவமாக அமையும். உணவின் போது அதிகமாக சர்க்கரை உடலில் செல்வதால் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து விடும்.

அதனால் உணவிற்கு பின்பு டெசெர்ட் எடுத்துக் கொண்டால் கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்து விடும். அதனால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் அதிகம்.

 
Copyright © 2014 Health Cure Tips Shared by WpCoderX